ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

மனமலர் கொய்து மஹேஶ பூஜ செய்யும் மனுஜனு மற்றொரு வேல செய்திடேண்ட வனமலர் கொய்துமதல்லயாய்கில் மாயா மனுவுருவிட்டுமிரிக்கில் மாய மாறும் (ஆத்மோபதேச சதகம் - பாடல் 29) மனமலர் கொண்டு இறைபோற்றுபவர் பிறிதொரு  வினையாற்ற வேண்டியதில்லை கான்மலர் கொய்க; இல்லையெனில் மாயையின் மந்திரம் ஓதவே மாயை மறையும் * முதல் பாடலிலேயே இரண்டு எதிரெதிர் உலகங்களை கண்டோம் - ஒன்று பொருட்களால் நிரம்பிய புற உலகு; மற்றொன்று எண்ணங்களாலும் புலனுணர்வுகளாலும் நிறைந்த நனவோடை போன்ற அக உலகு.  … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

அடிமுடியற்றடிதொட்டு மௌலியந்தம் ஸ்ஃபுடமறியுன்னது துர்ய போதமாகும்; ஜடமறிவீலது சிந்த செய்து சொல்லு ன்னிடையிலிருன்னறிவல்லறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் - பாடல் 28) அடிமுடி இல்லாது, அடி முதல் முடி வரை தெள்ளென அறியப்படுவது துரிய நனவு ஜடம் அறிதலற்றது; இது புரிந்தபின் இடையில் இருப்பது அறிவல்ல என்றறிக! * முந்தைய பாடலில் அகம் என்பது, தன்னிலிருந்து தோன்றியதும் முழுமையான இருளில் தன்னை மறைத்துக்கொண்டிருப்பதுமான தூய நனவென வரையறுக்கப்பட்டது. இதிலிருந்து, தன்னையறியாத இருளொன்றும் தன்னை அறிந்ததாக முழுதறியும் ஒரு அறிவும் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27

இருளிலிருன்னறியுன்னதாகுமாத்மா வறிவதுதானத நாமரூபமாயும் கரணமொடிந்த்ரிய கர்த்த்ருகர்மமாயும் வருவது காண்க! மஹேந்திரஜாலமெல்லாம் (ஆத்மோபதேஶ ஶதகம் - பாடல் 27) இருளிலிருந்தபடி தன்னையறியும் அகம் அதறியும் அதன் பெயர் வடிவம் செயல் புலன் வினையென அனைத்தும் பெரும் மாயாஜாலம் சீட்டுக் கட்டில் முதலில் உள்ளது கோமாளியை குறிக்கிறது, இறுதியாக உள்ளது மந்திரவாதியை. கோமாளியில் தொடங்கி மந்திரவாதியில் முடிவதற்குள் நீதிபதி, மரணம் என வாழ்வின் பல கூறுகளைக் குறிக்கும் சீட்டுகளை நாம் காண்கிறோம். அதேபோல், நம் வாழ்வும் கற்றறியா கோமாளியில் துவங்கி … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26

அவயவமொக்கெயமர்த்தியாணியாய் நி ன்னவயவியாவியெயாவரிச்சிடுந்நு; அவனிவனென்னதினாலவன் நினய்க்கு ன்னவஶதயாமவிவேகமொன்னினாலே (ஆத்மோபதேஶ ஶதகம் - பாடல் 26) ஆணிபோல் உறுப்புகளை ஒன்றிணைக்கும் ஆவிபோன்றதை மூடியிருக்கும் உடல்கொண்டவன் அவிவேகத்தாலே ‘அவன்’ ‘இவன்’ என எண்ணிச் சோர்கிறான் பல உறுப்புகளால் ஆன நமது உடல், வாழும் உயிர் என்ற ஒன்றால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆவித்தன்மை கொண்ட மூச்சு எனும் முகமையால் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டமைக்கப்பட்ட ஒரு உடலின் தோற்றம் பிறிதொரு உடலிலிருந்து மாறுபடுவதால், அனைத்து உயிரிகளிலும் உறையும் உயிர் எனும் பொருள் ஒன்றே … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 25

ஒருவனு நல்லதுமந்யனல்லலும் சேர் ப்பொரு தொழிலாத்மவிரோதியோர்த்திடேணம் பரனு பரம் பரிதாபமேகிடுன்னோ ரெரி நரகாப்தியில் வீணெரிஞ்ஞிடுன்னு (ஆத்மோபதேச சதகம் - பாடல் 25) நன்மை ஒருவருக்கும் தீமை பிறருக்கும்  பயக்குமெச் செயலும் அகத்திற்கெதிரியென அறியவேண்டும் பிறர்க்குப் பெருவலி அளிப்போர் யாரும் நரகெனும் எரிகடலில் வீழ்ந்தெரிவார் திண்ணம் முந்தைய பாடலில் அனைவரின் மகிழ்ச்சிக்குமான நேர்மறை வழியைக் கூறிய நாராயண குரு இங்கே தீமையைக் கொணரும் எதிர்மறை வழியை வைத்து சமன்செய்கிறார். வரலாறு நெடுக, புனிதர்களும், மெய்யியலாளரும், மீட்பர்களும், ஆசான்களும் என … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 25

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 24

அவனிவனென்னறியுந்நதொக்கெயோர்த்தா லவனியிலாதிமமாயொராத்மரூபம்; அவனவனாத்மசுகத்தினாசரிக்கு ந்நவயபரன்னு சுகத்தினாய் வரேணம்                                          (ஆத்மோபதேச சதகம் - பாடல் 24) அவன் இவன் என அறிபவையெல்லாம் அவனியில் ஒற்றை ஆதி வடிவாம் அவனவன் தன் நலனுக்காற்றுவதெல்லாம் அயலவன் நலனும் உவப்பின் உயர்வாம் நம்மைச் சுற்றிலும் நம்மைப் போன்றே உள்ள மாந்தரை பார்க்கிறோம். மானுடரின் சில … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 24

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 23

அபரனுவேண்டியஹர்ன்னிசம் ப்ரயத்னம் க்ருபணதவிட்டு க்ருபாலு செய்திடுந்நு க்ருபணனதோமுகன்னாய்க்கிடந்நு செய்யு ந்நபஜயகர்ம்மமவன்னுவேண்டி மாத்ரம்                                       (ஆத்மோபதேச சதகம் - பாடல் 23) பிறனுக்காக பகலிரவும் வினைபுரிபவன் தன்னலம்துறந்த அருளாளன் தனக்கென மட்டும் பயனற்றதை செய்பவன் தன்னலத்தில் அமிழ்பவன் ஒருவர் தன் வாழ்வை நோக்குகையில், அதில் கட்டமைப்பு சார்ந்த சில வரம்புகள் இருப்பதை பார்க்கிறார். … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 23

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

ப்ரியமபரன்றெயதென் ப்ரியம்; ஸ்வகீய ப்ரியமபரப்ரியமிப்காரமாகும் நயமதினாலெ நரன்னு நன்ம நல்கும் க்ரியயபரப்ரியஹேதுவாய் வரேணம் (ஆத்மோபதேச சதகம் : பாடல் 22) பிறன்நலம் என்நலமாகும் தன்நலம் பிறன்நலமாகும் தன்நலம் பயக்கும் செயலெல்லாம் பிறன்நலம் கருதல் வேண்டும் ஒரு புழுவானாலும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் யோகியானாலும் ஒரு ஜீவராசியின் வாழ்வை கவனித்தால் அதன் அனைத்துச் செயல்களும் இன்ப வேட்கையால் தூண்டப்படுபவையே என்பது தெரியும். தூண்டல்கள் தன்னுணர்வுடனும் தோன்றலாம், நனவிலி நிலையிலும் தோன்றலாம். இங்கு அமர்ந்திருக்கையில் நிலைமாறி அமர்வதுகூட இன்னும் வசதியுடன் இருப்பதற்காகத்தான். … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21

ப்ரியமொரு ஜாதியிதென்ப்ரியம் த்வதீய ப்ரியமபர ப்ரியமென்னநேகமாயி ப்ரியவிஷயம் ப்ரதி வன்னிடும் ப்ரமம்; தன் ப்ரியமபர ப்ரியமென்னறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 21) ஒன்றென இருக்கும் விருப்பை  எனதென உனதென பிறனதென பிரிக்கையில் வருவது குழப்பம் தன்விருப்பே பிறன் விருப்பும்  அனுபவம் என்பது அக அனுபவம் புற அனுபவம் என்று இருவகைப்படும். புற உலகில் நாம் பொருட்களுடனும், மக்களுடனும், பல்வேறு வகையான நிகழ்வுகளுடனும் இடைவினையாற்றுகிறோம். அகத்தில் எண்ணங்களை ஓம்புகிறோம்; நினைவுகளை மீட்டெடுக்கிறோம்; சில புலனனுபவங்களை பெறுகிறோம். இவ்வெல்லா … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20

உலகினு வேறொரு ஸத்தயில்லதுண்டெ ன்னுலகருரப்பது ஸர்வமூஹஹீனம்; ஜளனு விலேசயமென்னு தோன்னியாலும் நலமியலும் மலர்மால நாகமாமோ? (ஆத்மோபதேச சதகம் – பாடல் 20) இவ்வுலகன்றி பிறிதொரு மெய்மையில்லை உண்டென்று உலகோர் உரைப்பது சிந்தனையின்மையால் பாம்பென்று மூடனுக்கு தோன்றினாலும் நன்மலர்மாலை நாகமாகுமோ? சில நேரங்களில் நாம் வாழும் இவ்வுலகு இருண்டதாகத் தோன்றுகிறது. இதை துறந்து எங்காவது ஓடிவிடவேண்டுமென்று நினைக்கிறோம். அனைத்தும் எங்ஙனம் இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கக்கூடிய பிறிதொரு உலகு இருக்கிறது என்று எண்ணுகிறோம். “பாழாய்ப் போன இவ்வுலகை விட்டு ஆன்மீகம் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20