1948-ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் நான் முதன்முறையாக ரமணமகரிஷியைப் பார்க்கச் சென்றேன். டாக்டர். மெஸ் அவர்களின் (சாது ஏகரஸர்) குரு அவர் என்பதால் எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிருந்தது. செல்லும் முன்னால் அவரைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். அப்படிப்பட்ட மகானைப் பார்ப்பது வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்று எண்ணியிருந்தேன். திருவண்ணாமலை மிகவும் வெப்பமான இடம். ஒருவரால் அந்த இடத்தில் இலகுவாக உணர்வது சிரமம். ஆசிரமத்தில் இருந்த ரமணமகரிஷியைக் காணச் செல்லும் முன்பு, தவமிருந்த அவருடைய ஆரம்ப … Continue reading அன்பும் ஆசிகளும்
ரமணர்
பொருந்தாத மகுடம்
பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவிபோல வாழ வேண்டும் என்கிற ஆவலில் தத்துவப் பாடப்பிரிவில் சேர்ந்தேன். முறைப்படி துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன். கல்லூரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன். விவேகானந்தரின் சரிதையைப் படித்தபோது அவரும் இதேபோல நடந்துகொண்டதைப் படித்திருந்ததால் நானும் அது போலவே இருக்க விரும்பினேன். ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு … Continue reading பொருந்தாத மகுடம்