காலைப்பனியை நான் முத்தமிடுவதில்லை
நீ ஒரு மலர்
வண்டெதுவும் முத்தமிடாத மலர்
நீ ஒரு பாடல்
மறையக்கூடிய உதடுகளால் இசைக்கப்படாத பாடல்
என் அகத்தை தூய்மையாக்கும்
இறைகூறும் இரகசியம் நீ
பேரின்பப் பரவசம் நல்கும்
இன்னிசைப் பாடல் நீ
நிலவை நான் கைகளில் அள்ளுவதில்லை
காலைப்பனியை முத்தமிடுவதுமில்லை
உன்னை என் கனவுகளில் காண்பதும்
நிலைபேற்றின் இன்னிசையை என
உன்னிடம் அன்பு பாராட்டுவதும் ஒழிய
வேறொன்றையும் நான் விழையவில்லை
கால்களை சேறாக்கிக் கொள்ளாமல்
மண்ணில் நடக்கும் ரகசியத்தை
உன்னிடமிருந்து கற்கவேண்டும் நான்