புகழ்மிகு பீடத்தையே
எப்போதும் எனக்களித்தாய்
என்கால்கள் இளைப்பாற
உன் கனிவென்னும் கம்பளத்தை விரித்தாய்
இனியதும் மென்மையானதுமான பார்வையால்
என்னை நீ தூய்மையாக்குவது எங்ஙனம்?
உன் மௌனத்தில் பிறந்த ஞானமே
என் நாவிலெழும் சொற்களானது எவ்வாறு?
அடக்கமே உருவான உன் அழகிய நெற்றியில்
வெகு இயல்பாய் அமர்ந்திருக்கும்
மௌனத்தின் ஆற்றலை
உன்னிடமிருந்து கற்க வேண்டும்.